Tags : கோபல்ல கிராமம்

சங்கீத வித்துவானாக விரும்பினேன்

தமிழ் இலக்கிய உலகத்திற்கு என்னுடைய கரிசல் களம் புதியது. என்னுடைய மக்கள் புதியது, அவர்களுடைய பழக்கவழக்கங்கள் புதியது. அவர்களுடைய பேச்சு வழக்கு புதியது. இப்படி பல்வேறு புதியவற்றுடன் நான் வரும் போது முழு தமிழ்நாடுமே என் பக்கம் பார்த்துத் திரும்புகிறது. “எழுது நன்றாயிருக்கு, எழுது, எழுது” என்று உற்சாகப்படுத்தினார்கள். இப்படித்தான் நான் தொடர்ந்து எழுத வந்தேன்.