Tags : சாவித்திரி சரித்திரம்

சாவித்திரி சரித்திரம்: முத்துமீனாட்சியான கதை

பெண்களின் நிலையைச் சிறப்பாகப் படைத்துக் காட்டிய தென்னிந்திய நாவல்களாக ஒ. சந்துமேனன் (1847–1899) எழுதிய ‘இந்துலேகா’ (மலையாளம்/1889), குலவாடி வெங்கடராவ் (1844–1913) எழுதிய ‘இந்திராபாய் அல்லது சட்தர்ம விஜயவு’ (கன்னடம்/1899), அ. மாதவையாவின் ‘முத்துமீனாட்சி’ (ஒரு பிராமணப்பெண் சுவ சரிதை) (1904) ஆகிய மூன்றையும்தான் விமர்சகர்கள் முன்மொழிகிறார்கள். இவற்றில் இந்திய அளவில் சிறப்பு வாய்ந்ததாக ‘முத்துமீனாட்சி’ விளங்குகிறது.