ஒருநாள் போர்க்களத்தில் செத்துப் போயிருந்த சிங்கள இராணுவப் படைச் சிப்பாயினது உயிரற்ற உடலை நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சிப்பாயின் முகம் எனது உடன்பிறவா சகோதரனொருவனை நினைவுபடுத்தியது. அவனும் நானும் சிறுவயதில் ஒன்றாக விளையாடப் பழகியிருந்தோம்.
திருத்தவோ தள்ளி உள்ளே விடவோ நேரமில்லை, சுகந்தனின் காரை விட்டுவிட்டு போவதாக முடிவெடுத்தோம். இப்போது எனது காரைத் தெருவுக்கு எடுக்க, சுகந்தனின் ஹோண்டாவைப் பார்த்து அது இளக்காரமாகச் சிரித்தது
அவன் கவனத்தைக் கவருவதற்காக இவள் பண்பலை வானொலியில் போய்க்கொண்டிருந்த இசையின் சத்தத்தை உயர்த்தினாள். அவன் அப்போதும் அவள் பக்கம் திரும்பினானில்லை. வைப்பரால் கண்ணாடியின் ஈரத்தை இழுத்துக் கொண்டிருக்கையில் அமரா அவனைக் கூப்பிட்டாள். “மெஸூர்.”
'வண்ணத்துப் பூச்சிக் கனவுகள்' எனும் இச் சிறுகதையானது சமகால உகாண்டா சமூகத்தின் இருண்ட பகுதிகளை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.