நாரணோ ஜெயராமன், எழுபதுகளில் புதுக்கவிதையின் இளம்பிராயத்திலேயே தனித்தன்மை வாய்ந்த குறுங்கவிதைகளை எழுதிக் கவனம்பெற்றவர்.
இத்தனை வருடங்களில் / அவள் / அவனுக்காக எதுவும் பெரிதாகச் / செய்ததேயில்லை. / / ஒவ்வொரு முறையும் / அவள் உச்சம் எய்துகிற / பாவனை தவிர்த்து.
சினிமாக் கதாநாயகர்கள் / வில்லன்களை / ஒற்றைக்கையால் தூக்கிச் / சுவற்றில் நிறுத்துவதைப் பார்த்த / மகள் தன்னிடம் இருக்கும் / பொம்மைகளை எல்லாம் / அவ்வாறே மேல் தூக்கி முறைக்கிறாள்
ஒரு ஆற்றலுள்ள படைப்பாளி, நுட்பமான முறையில், தனக்குள் இருந்தெழும் நுண்ணிய உணர்வுகளை பற்பல கோணங்களில் வெளிக்காட்டுதல், எம்மையும் அவரோடு இழுத்துச் செல்கிறது.
காதருகில் வைத்தால் மட்டுமே கடல் ஒலிக்கும் சங்கு உனது அன்பு. புறக்கணிப்பின் நகக் கணுக்களால் எவ்வளவு குத்தியும் அழிந்திடாத மச்சம் என் பரிவு.
ஓவியம்: ரேவதி நந்தனா 1. கல் வெட்டாங் குழி வெயில் மின்ன பாசி படர்ந்து மாணிக்க படிகமாய் ஓர் கல் வெட்டாங் குழி. ஒரு காலத்தில் துவைக்க குளிக்கவென ஊருக்கு அது ஒரு வரம். மஞ்சள் புடவையில் அவள் விழுந்து மிதந்த இரவுக்கு பிறகு யாதம் புழங்காமல் கருநீலம் படியவாயிற்று இப்போது. பாறை இடுக்கில் முளைத்த மஞ்சணத்தி மர கிளையொன்று அந்தக் குழியில் தாழ, பாறைக்கும் கிளைக்கும் இடையே நீர் மேல் வலை பின்னி காத்திருக்கிறது ஒரு […]
எல்லாம் சரி காடென்பது பசுமையா மரங்களா மலர்களா கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அல்ல வனம் அது காலம் காலமாய் தொடரும் முடிவிலி காதல்
பசியோடு இருகி சாத்தி இருக்கும் கதவு இடுக்கில் நுழையும் நாய்க்குட்டி வேண்டுவது அன்பின் சிறு கீற்றை
அக்கம் பக்கத்தவர்களின் இழப்புகள் இணை பணியாளர்களின் விபத்துகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன அவ்வப்போது துர்மரணங்களும்.
நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள் / ஆனால் ஒருபொழுதும் / எழுதிவிடாதீர்கள் / அரிவாளால் வெட்டுண்டு / ஈ மொய்த்தபடி / வாய்பிளந்து கிடக்கும் / சாதியற்றவனின் மரணத்தை